இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Saturday, November 1, 2014

எதுவுமே கிடைக்காட்டியும்... நாங்கள்லாம்...!

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று நண்பர்களிடையே, யாருடைய நாடு பழம்பெருமை வாய்ந்தது, யாருடைய நாட்டில் முன்னேறிய தொழில்நுட்பம் இருந்தது என்று விவாதம் எழுந்தது.
முதல் நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின்போது, நீண்ட கம்பிகள் கிடைத்தன, அதனால் எங்கள் நாட்டில் அந்தக் காலத்திலேயே மின்சார வசதிகள் இருந்தன என்று முடிவுக்கு வந்தோம், எனவே எங்கள் நாடுதான் தொழில்நுட்பத்தில் முன்னோடி!"
அடுத்தவர் சொன்னார், "எங்கள் நாட்டில் பூமியைத் தோண்டியபோது, மெல்லிய கம்பிகள் கிடைத்தன, அதனால் அந்தக்காலத்திலேயே எங்கள் நாட்டில் தொலைபேசி வசதிகள் இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம், மின்சாரத்தைவிட தொலைபேசி மேம்பட்டது, எனவே, எங்கள் நாடுதான் அதிகத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது...!"
இறுதியாக, மூன்றாவது நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் மண்ணுக்கடியிலிருந்து எதுவுமே கிடைக்கவில்லை, எனவே அந்தக் காலத்திலேயே எங்கள் நாட்டில் Advanced wireless communication systems இருந்திருக்கிறது, உங்கள் இருவரின் நாட்டைவிட எங்கள் நாடே முன்னேறியது........!!!!!!!!!"
வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியா மரபணு விஞ்ஞானத்திலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பேசியிருப்பதற்கும், இதற்கும் தொடர்பிருப்பதாக நீங்கள் எண்ணிக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல......

No comments:

Post a Comment